search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டுக்கல் பெண்"

    திண்டுக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு 3 குழந்தைகளுடன் வந்த பெண் ஒருவர், வேறொரு பெண்ணுடன் தொடர்பில் உள்ள எனது கணவரை மீட்டுத்தருமாறு கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார்.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அருகே மெய்யம்பட்டியை சேர்ந்தவர் அழகர்சாமி. அவரது மனைவி தமிழ்ச்செல்வி(வயது37). இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இன்று காலை அவர் தனது குழந்தைகளுடன் கண்ணீர் மல்க போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் வந்தார். அங்கு அவர் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது,

    எனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இதனை தட்டிக்கேட்டால் என்னை அடித்து உதைக்கிறார். திருமணத்தின் போது எனது வீட்டில் 15 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுத்தனர்.

    இதனைவைத்து வண்டி வாங்கி வாடகைக்கு எனது கணவர் ஓட்டிவந்தார். தற்போது பெண் சகவாசம் அதிகம் உள்ளதால் பலரிடம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அந்த பணத்தை அவர் கட்டவில்லை. இதனால் நாங்கள் உணவுக்கு கூட கஷ்டப்படுகிறோம். இதுகுறித்து கணவரிடம் கேட்டால் நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் வைத்துக்கொள்வேன் என்று மிரட்டுகிறார்.

    எனவே எனது குழந்தைகள் நலன் கருதி கணவருடன் சேர்த்து வைக்கவேண்டும்.

    இவ்வாறு அம்மனுவில் கூறியிருந்தார்.
    திண்டுக்கல் அருகே வரதட்சணையால் தனது மகள் இறந்துள்ளதாக தாய் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே அய்யலூரை சேர்ந்தவர் வைரபெருமாள். கூலித் தொழிலாளி. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். நேற்று மாலை மகாலட்சுமி வீட்டில் பிணமாக தொங்கி உள்ளார்.

    இது குறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இது குறித்து மகாலட்சுமியின் தாயார் மகேஸ்வரி வடமதுரை போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியதாவது:-

    எனது மகள் மகாலட்சுமியிடம் அவரது கணவர் தனக்கு ரூ.5 லட்சம் வரை கடன் இருப்பதாகவும் தங்கள் வீட்டில் இருந்து பணம் வாங்கி வர வேண்டும் என கூறி வற்புறுத்தி உள்ளார்.

    இதனால் கடந்த சில நாட்களாகவே மகாலட்சுமி மனஉளைச்சலில் இருந்தார். எங்களிடம் கூறியபோது விரைவில் பணம் ஏற்பாடு செய்து தருகிறேன் என நான் கூறினேன்.

    இந்த நிலையில் வைரப்பெருமாளின் உறவினர் எனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்கள் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் உள்ளது என கூறினார்.

    எனவே மகாலட்சுமியின் சாவில் மர்மம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஆர்.டி.ஓ. அருண்ராஜ் மற்றும் வேடசந்தூர் டி.எஸ்.பி. சிவக்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×